உத்தமம் கிழக்கு,
ஓங்குயிர் தெற்கு,
மத்திமம் மேற்கு,
மரணம் வடக்கு.
கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.
வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர். வடதிசையிலிருந்து வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும் இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.தொடுசிகிச்சையாளர் அ.உமர்பாரூக் தன்னுடைய "உடலின் மொழி" என்ற புத்தகத்தில், நம் ஆரோக்கியம் குறித்து நம்மிடம் பேசும் உடலின் மொழியை பற்றி மிகவும் அழகாக கூறியுள்ளார். தூசியை உள்ளே அனுப்ப மறுக்கும் உடலின் எதிர்ப்புக் குரலே தும்மல். திரிந்த பாலை வாந்தியாகவும் பேதியாகவும் வெளியேற்றுவது குழந்தையின் உடலின் மொழி என்று துவங்கும் இப்புத்தகம், எல்லா உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நமது முறையற்ற உணவுப் பழக்கமே என்பதை பற்றியும், நாம் சாப்பிடும் முறை பற்றியும் மிகப்பெரிய புரிதலை நமக்கு வழங்குகிறது.
எப்படி உண்பது?
எப்படி தண்ணீர் குடிப்பது?
நோய் என்றால் என்ன?
உடம்பு தவறு செய்யுமா? என்ற பல கேள்விகளுக்கு பதில்கள் இதில் விளக்கமாக உள்ளது.
No comments:
Post a Comment